'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

இந்திய சினிமா பிரபலங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் மெழுகுச்சிலை அமைக்கப்பட்டு கவுரவிப்பது என்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அல்லு அர்ஜுன் கடந்த இரண்டு வருடங்களில் ;புஷ்பா' படம் மூலமாக இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் ரசிகர்களை பெறும் அளவிற்கு புகழ்பெற்றுள்ளார்.
அந்த வகையில் துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜுனின் மெழுகுச்சிலை இடம்பெற உள்ளது. இதற்காக கடந்த வருடம் இந்த சிலையை செய்வதற்கு தேவைப்படும் அல்லு அர்ஜுனனின் 200 விதமான புகைப்படங்கள் மற்றும் அளவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் வரும் மார்ச் 28ஆம் தேதி மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் இந்த சிலை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த விழாவில் கலந்து கொள்ள தனது குடும்பத்துடன் அல்லு அர்ஜுன் துபாய் கிளம்பி சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவர் தனது குடும்பத்துடன் கிளம்பிச் செல்லும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி உள்ளன.