ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! |

தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான படம் 'கெவி'. கொடைக்கானல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் தங்கள் வாழ்விற்காகப் போராடும் மலையக மக்களின் கதை. ஷீலா, ஜாக்குலின் லிடியா, மற்றும் ஆதவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர்ட் அப் டிரையாங்கில்ஸ் பிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான, இந்த படம் 98வது ஆஸ்கார் அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதே போன்று 'தலித் சுப்பையா: கலககாரர்களின் குரல்' என்ற ஆவணப் படம் ஆஸ்கர் தகுதி செயல்முறையின் பகுதியாக அகாடமி திரையிடல் அறைக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கிரிதரன் இயக்கி உள்ளார்.