ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

98வது ஆஸ்கர் அகாடமி விருது விழா, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி நடக்கிறது. 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு 'ஹோம்பவுண்ட்' என்ற இந்தி படம் இந்திய அரசின் சார்பில் தேர்வாகியுள்ளது.
இதில் ஜான்வி கபூர், இஷான் கட்டர் நடித்துள்ளனர். கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் இரண்டு இளைஞர்கள் பற்றிய கதை.
இந்நிலையில், 'ஹோம்பவுண்ட்' படத்தின் மீது கதை திருட்டு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படத்தை தயாரித்த தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஓடிடியில் வெளியிட்ட நெட்பிளிக்ஸ் இந்தியா மீது எழுத்தாளர் பூஜா சாங்கோய்வாலா வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் அளித்த புகார் மனுவில், "நான் எழுதிய 'ஹோம் பவுண்ட்' என்ற நாவலின் கதையை தழுவி படத்தை எடுத்துள்ளனர். தலைப்பை தவறாக பயன்படுத்தியது மட்டுமின்றி, படத்தின் இரண்டாம் பாதியில் எனது நாவலின் கணிசமான பகுதிகளை அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்டுள்ளது. காட்சிகள், உரையாடல்கள், கதை அமைப்பு ஆகியவற்றையும் காப்பி அடித்துள்ளனர். எனவே படத்தை தடை செய்து, எனக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.