ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
நடிகர் மம்முட்டி தான் நடித்து வரும் படம் ஒன்றிற்காக தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் இலங்கையில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார் மம்முட்டி. இதுகுறித்த புகைப்படங்களை ஜெயசூர்யாவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
90களில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக, ரன் மெஷினாக வலம் வந்தவர் சனத் ஜெயசூர்யா. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த இவர், தற்போது இலங்கையின் சுற்றுலாத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் மிகவும் நெருக்கடியான சூழலிலும் இலங்கை சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஜெயசூர்யா. அதன் ஒரு பகுதியாக தான் ஜெயசூர்யா மம்முட்டி இருவரின் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி ஜெயசூர்யா கூறும்போது, “மூத்த மலையாள நடிகர் மம்முட்டியை சந்தித்ததில் பெருமைப்படுகிறேன். உண்மையிலேயே நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார்.. ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்ததற்கு நன்றி. இதேபோல அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நண்பர்களையும் எங்களது நாட்டிற்கு சுற்றுலாவாக வந்து பார்வையிட வேண்டுமென அழைப்பு விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.