பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

நடிகர் பிரித்விராஜ் கடந்த வருடம் டைரக்ஷன், நடிப்பு என பிசியாக இருந்தார். ஆனால் அவரை தேடி தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இருந்தும் பட வாய்ப்புகள் நிறைய வருவதால் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் ‛வாரணாசி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர மலையாளத்தில் ‛ஐ நோபடி' மற்றும் ‛கலிபா' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரித்விராஜ்,
இதில் ‛ஐ நோபடி' படத்தை ‛ரோஷாக்' பட புகழ் இயக்குனர் நிசாம் பஷீர் என்பவர் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நடிகை பார்வதி நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். முழுக்க முழுக்க ஆக்சன் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் தயாரித்துள்ளார்.