சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதை அம்சத்துடன், வித்தியாசமான கதைக்களத்தில் தனது படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. பெரும்பாலும் புதுமுகங்களை மட்டுமே வைத்து படம் இயக்கி வந்த இவர், தற்போது நடிகர் மம்முட்டியை கதாநாயகனாக வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இவர் சொன்ன கதை பிடித்துப்போய் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்த மம்முட்டி, இந்த படத்தை தானே தயாரிக்கவும் செய்கிறார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் மம்முட்டி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண கிராமத்து மனிதனாக நடித்துள்ளார். அவர் கிராமத்து திண்ணையில் தலைக்கு கைகளை வைத்து படுத்து உறங்குவது போல இதற்கு முன்பு வெளியான புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.. இந்தநிலையில் தற்போது இன்னும் மாட்டுச்சாணம் மூலம் வரட்டி தட்டி அவற்றை சுவற்றில் காய வைக்கும் தமிழக கிராமத்து தெரு ஒன்றில், லுங்கியை மடித்துக்கொண்டு பழைய டிவிஎஸ் எக்ஸெல் வண்டியை மம்முட்டி ஓட்டி வருவது போன்று ஒரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு பக்கம் அதிரடி கேங்ஸ்டர், அதிரடி போலீஸ் அதிகாரி என நடித்து வரும் மம்முட்டியின் இந்த சராசரி மனிதன் அவதாரம் நம்மை ஆச்சரியப்படுத்தவே செய்கிறது.