உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக பிரபலமான முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஜோஷி. மம்முட்டி, மோகன்லால், திலீப் என முன்னணி நடிகர்களை வைத்தே கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் இயக்கியவர். தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ரம்பான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டது என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் விசாரணையில் நேற்று முன்தினம் இரவு ஜோஷி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிலே இருந்த நிலையிலேயே மர்ம நபர் ஒருவன் வீட்டிற்குள் புகுந்துள்ளான். முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகளில் வைர மோதிரங்கள், காதணிகள், தங்க செயின்கள் மற்றும் வளையல்கள் என ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகையை அந்த மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளான். மேலும் வீட்டிற்குள் இருந்த சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளான். இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், உடுப்பியில் ஒருவரை கைது செய்துள்ளனர்.