ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா |

ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகும் நிலையில் கடந்த பிப்ரவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் தீபிகா. தற்போது இருவரும் தங்களது குழந்தையின் வருகையை எதிர்நோக்கி மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருப்பதாக பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் ரன்வீர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமண புகைப்படங்களை திடீரென்று நீக்கியுள்ளார். இதனால் பாலிவுட் மீடியாக்களில் ரன்வீர் சிங்கும், தீபிகாவும் பிரியப் போவதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியானது .
அதையடுத்து ரன்வீர் சிங் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், என்னுடைய இன்ஸ்டா பக்கத்திலிருந்து திருமண புகைப்படங்களை நீக்கவில்லை. அதை ஆர்கேவ் செய்து வைத்திருக்கிறேன் என்று உடனடியாக ஒரு தகவல் வெளியிட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். மேலும் தற்போது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் சிங்கம் அகைன் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.