மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |

நடிகர் பஹத் பாஸில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே தன்னை பற்றி எப்போதும் பேச வைத்துக் கொண்டே இருக்கிறார். அப்படி சமீபத்தில் மலையாளத்தில் அவர் கதாநாயகனாக நடித்த ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அவர் ரங்கா என்கிற காமெடி கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளார். படத்தையும் தாண்டி இவரது கதாபாத்திரம் குறித்து தான் பலரும் சிலாகித்து பேசி வருகின்றனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பஹத் பாசில் கூறும்போது, “நான் சாதாரணமாக வெளியே செல்வதற்கு யோசிப்பதில்லை. இப்போதும் கூட திடீரென வீட்டில் பால் இல்லாவிட்டாலோ அல்லது எனக்கு தேவையானது இல்லா விட்டாலோ அருகில் உள்ள கடைக்குச் சென்று நான்தான் வாங்கி வருகிறேன். அப்போது ரசிகர்கள் யாரும் ஓடிவந்து என்னை மொய்த்து கொள்வதில்லை. அதே சமயம் என்னை பார்த்து பலர் புன்னகைப்பார்கள். சிலர் செல்பி எடுக்க மொபைல் போன்களை தூக்குவார்கள். அதை பார்த்ததும் அங்கிருந்து உடனடியாக ஓடி வந்து விடுவேன்” என்று கூறியுள்ளார்.




