ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் பஹத் பாஸில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே தன்னை பற்றி எப்போதும் பேச வைத்துக் கொண்டே இருக்கிறார். அப்படி சமீபத்தில் மலையாளத்தில் அவர் கதாநாயகனாக நடித்த ஆவேசம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அவர் ரங்கா என்கிற காமெடி கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளார். படத்தையும் தாண்டி இவரது கதாபாத்திரம் குறித்து தான் பலரும் சிலாகித்து பேசி வருகின்றனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பஹத் பாசில் கூறும்போது, “நான் சாதாரணமாக வெளியே செல்வதற்கு யோசிப்பதில்லை. இப்போதும் கூட திடீரென வீட்டில் பால் இல்லாவிட்டாலோ அல்லது எனக்கு தேவையானது இல்லா விட்டாலோ அருகில் உள்ள கடைக்குச் சென்று நான்தான் வாங்கி வருகிறேன். அப்போது ரசிகர்கள் யாரும் ஓடிவந்து என்னை மொய்த்து கொள்வதில்லை. அதே சமயம் என்னை பார்த்து பலர் புன்னகைப்பார்கள். சிலர் செல்பி எடுக்க மொபைல் போன்களை தூக்குவார்கள். அதை பார்த்ததும் அங்கிருந்து உடனடியாக ஓடி வந்து விடுவேன்” என்று கூறியுள்ளார்.