அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் |
நடிகர் அல்லு அர்ஜுன் மீது கடந்த சில வருடங்களில் போலீசார் இரண்டுக்கும் மேற்பட்ட முறை வழக்கு பதிவு செய்தனர். அது எல்லாமே அவரைப் பார்ப்பதற்காக கூடிய அவரது ரசிகர்கள் கூட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல் காரணமாகத்தான் அவர் மீது வழக்காக பதியப்பட்டன. இந்த நிலையில் தற்போது அதேபோன்று மீண்டும் அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் நேற்றும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது 2024 லோக்சபா தேர்தலில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஆந்திராவில் பொருத்தவரை சட்டசபைத் தேர்தலும் இதனுடன் சேர்ந்து நடைபெற இருக்கிறது. நாளை (மே 13) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று நடிகர் அல்லு அர்ஜுன் ஆந்திராவில் உள்ள நந்தியால் தொகுதியில் போட்டியிடும் ஷில்பா ரவி எனப்படும் ரவி ரெட்டி என்கின்ற வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக அவரது வீட்டிற்கு தனது மனைவியுடன் நேரில் வருகை தந்தார்.
அவர் அங்கே வந்த விஷயம் பரவி தொண்டர்களும் அல்லு அர்ஜுன் ரசிகர்களும் அந்தப்பகுதியில் ஆயிரக்கணக்கில் கூடியதால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரவி ரெட்டியின் வீட்டில் பால்கனியில் இருந்து தொண்டர்களையும் ரசிகர்களையும் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார் அல்லு அர்ஜுன். அதே சமயம் இப்படி முன்னறிவிப்பு இல்லாமல் அல்லு அர்ஜுன் கூட்டத்தை கூட்டியது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி ஆந்திர போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தனது மாமாவான நடிகர் பவன் கல்யாணின் தேர்தல் வெற்றிக்கு சோசியல் மீடியா பதிவு மூலமாக அல்லு அர்ஜுன் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் அவரது முழு ஆதரவு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் குறிப்பாக தனது நெருங்கிய நண்பரான ரவி ரெட்டி என்பவருக்கும் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.