ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

'புஷ்பா' படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டார் ஆக பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். அவர் தற்போது தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்குப் பிறகு 'கேஜிஎப், சலார்' படங்களின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை படத்தைத் தயாரிக்க உள்ள தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார். அல்லு அர்ஜுன், பிரசாந்த் நீல் இருவரும் தற்போதுள்ள படங்களை முடித்த பிறகு இந்த 'ராவணம்' படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
ராமாயணத்தின் வில்லன் கதாபாத்திரமான ராவணன் கதையை மாற்றி 'பேன்டஸி' வகையில் இந்தப் படத்தைக் கொடுக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ராமாயணத்தைத் தழுவித்தான் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்க 2010ல் 'ராவணன்' படம் வெளிவந்தது.
'ராவணம்' படத்தை அதிக பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.




