டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
'புஷ்பா' படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டார் ஆக பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். அவர் தற்போது தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்குப் பிறகு 'கேஜிஎப், சலார்' படங்களின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை படத்தைத் தயாரிக்க உள்ள தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார். அல்லு அர்ஜுன், பிரசாந்த் நீல் இருவரும் தற்போதுள்ள படங்களை முடித்த பிறகு இந்த 'ராவணம்' படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
ராமாயணத்தின் வில்லன் கதாபாத்திரமான ராவணன் கதையை மாற்றி 'பேன்டஸி' வகையில் இந்தப் படத்தைக் கொடுக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ராமாயணத்தைத் தழுவித்தான் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்க 2010ல் 'ராவணன்' படம் வெளிவந்தது.
'ராவணம்' படத்தை அதிக பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.