நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் நடிகர்கள் அஜித்குமார், விஜய் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது தமன்னா பேசியதாவது: இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்துவிட்டதால் எனக்கு கல்லூரி அனுபவமே கிடைக்கவில்லை. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறேன். படப்பிடிப்புக்கு இடையில் தான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்.
நடிகர் விஜய் மிகவும் மென்மையான, எளிமையான மனிதர். நடனம் ஆடுவதில் அவருக்கும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்.,க்கும் தனி திறமை இருக்கிறது. நடனத்தில் அவர்கள் இருவரும் சிறந்தவர்கள் என்று நினைக்கிறேன். அஜித் உடன் 'வீரம்' படத்தில் நடித்தபோது அஜித் எனக்கு இட்லி சுட்டுக்கொடுத்தார். நல்ல மனம் கொண்டவர், எளிய மனிதர். குடும்பத்தை மதிக்கும் நல்ல குடும்பஸ்தர். இவ்வாறு தமன்னா பேசினார்.