குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி |

கற்றது தமிழ், தங்கமீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் பறந்து போ. இதில் மிர்ச்சி சிவா, கிரேஷ் ஆண்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா ஒரு பாராட்டு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த பரபரப்பான உலகை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால் உங்கள் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு மலை ஏறுங்கள். அப்படி இல்லை என்றால், இயக்குனர் ராமின் பறந்து போ படத்திற்கு அவர்களை கூட்டிச் செல்லுங்கள். காரணம் இந்த படம் நமக்கு வாழ்க்கையில் என்ன தேவை, எதை இழக்கிறோம் என்பதை அழகாக சொல்கிறது. நான் இதுவரை பார்த்த படங்களில் இது ஒரு இனிமையான படம். இயக்குனர் ராமிற்கும் அவரது பட குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.
பறந்து போ படம் திரைக்கு வந்து நான்கு நாட்களில் இதுவரை ரூ.4.1 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.