பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ஜூலி கணபதி, நளதமயந்தி, சரோஜா படங்களில் ஏற்கனவே நடித்துள்ள விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, தனுஷின் பா.பாண்டி படத்தில் ஒரு சீனில் நடித்தாலும் நச்சென்று நடித்திருந்தார். தனது அம்மாவின் முன்னாள் காதலரான ராஜ்கிரண், அவரை தேடி வந்திருக்கிற சேதியை அம்மாவான ரேவதி சொன்னபோது, அதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், வயதான காலத்தில் ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வது ஒன்றும் தப்பில்லை என்று கேசுலாக சொல்வார் டிடி. அப்படி அவர் பேசி நடித்த காட்சிக்கு தியேட்டரில் பெரிய கைதட்டல் கிடைத்தது.
அதையடுத்து, தற்போது பல டைரக்டர்கள் டிடியை நடிக்க அழைப்பு விடுத்தும் வருகிறார்கள். ஆனால், அப்படி தன்னை நடிக்க அழைப்பவர்களிடம், நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இரண்டு சீனில் வந்தாலும் அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம், என் இமேஜை கெடுக்காத கேரக்டராக இருக்க வேண்டும். சின்னத்திரையில் எனக்கென்று ஒரு இமேஜ் உள்ளது. எனக்கு ஏராளமான ரசிகர் ரசிகைகள் உள்ளனர். அதனால் அவர்கள் மத்தியில் என்னை மேலும் உயர்த்தக்கூடிய கதாபாத்திரங்களாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். மேலும், அந்த கேரக்டர் என்னை இம்ப்ரஸ் பண்ணவில்லை என்றாலும் அதில் கண்டிப்பாக நடிக்க மாட் டேன் என்று கதையை கேட்பதற்கு முன்பே தனது சார்பில் முன்மொழிந்து விடுகிறார் திவ்யதர்ஷினி.