நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த பட படப்பிடிப்புக்காக சில தினங்களுக்கு முன் மும்பை சென்ற ரஜினி அங்கு அமிதாப் உடன் சில காட்சிகளில் நடித்தார். இருவரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அங்கு படப்பிடிப்பை முடித்து கொண்டு விமானத்தில் சென்னை திரும்பினார் ரஜினி.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛வேட்டையன் படப்பிடிப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கூலி டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. காப்புரிமை விவகாரம் இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்னை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்'' என்றார்.
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் ரஜினி நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இதில் ரஜினி நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‛தங்கமகன்' படத்தின் டிஸ்கோ பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூலி படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அது தொடர்பான கேள்விக்கு இப்படி பதில் கூறி உள்ளார் ரஜினி.