சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி | சூதாட்ட படத்தில் விஜய்சேதுபதி | விடுதலை 2ம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா? | வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா | பிளாஷ்பேக்: 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் ஹீரோவாக்க நினைத்த பாலச்சந்தர்: மறுத்த ஜெயபாரதி | பெண் வேடத்தில் அசார் | இனி யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் : சுசித்ரா திடீர் முடிவு |
ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த பட படப்பிடிப்புக்காக சில தினங்களுக்கு முன் மும்பை சென்ற ரஜினி அங்கு அமிதாப் உடன் சில காட்சிகளில் நடித்தார். இருவரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அங்கு படப்பிடிப்பை முடித்து கொண்டு விமானத்தில் சென்னை திரும்பினார் ரஜினி.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛வேட்டையன் படப்பிடிப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கூலி டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. காப்புரிமை விவகாரம் இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்னை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்'' என்றார்.
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் ரஜினி நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இதில் ரஜினி நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‛தங்கமகன்' படத்தின் டிஸ்கோ பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூலி படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அது தொடர்பான கேள்விக்கு இப்படி பதில் கூறி உள்ளார் ரஜினி.