பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன். அர்ஜுனா விருது பெற்ற கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்த படத்தில் தன்னுடைய அரசியல் பார்வையை ஒரு புனைவு கதையாக வைத்திருப்பதாகவும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூறுகிறார்.
அக்டோபர் 17ம் தேதியான நாளை திரைக்கு இந்த படத்திற்கு பைசன் என்று ஆங்கிலத்தில் டைட்டில் வைத்தது ஏன்? என்று மாரி செல்வராஜை கேட்டபோது, இந்த படத்தை தமிழகம் கடந்து வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் என்னிடத்தில் கூறினார்கள். அதன் காரணமாகவே காளமாடன் என்று நான் வைத்திருந்த டைட்டிலை பைசன் என்று ஆங்கிலத்தில் மாற்றினேன். என்றாலும் தமிழகத்தை சார்ந்த கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு கதைக்கு இப்படி ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் மாரி செல்வராஜ்.