இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன். அர்ஜுனா விருது பெற்ற கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்த படத்தில் தன்னுடைய அரசியல் பார்வையை ஒரு புனைவு கதையாக வைத்திருப்பதாகவும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூறுகிறார்.
அக்டோபர் 17ம் தேதியான நாளை திரைக்கு இந்த படத்திற்கு பைசன் என்று ஆங்கிலத்தில் டைட்டில் வைத்தது ஏன்? என்று மாரி செல்வராஜை கேட்டபோது, இந்த படத்தை தமிழகம் கடந்து வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் என்னிடத்தில் கூறினார்கள். அதன் காரணமாகவே காளமாடன் என்று நான் வைத்திருந்த டைட்டிலை பைசன் என்று ஆங்கிலத்தில் மாற்றினேன். என்றாலும் தமிழகத்தை சார்ந்த கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு கதைக்கு இப்படி ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் மாரி செல்வராஜ்.