இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபகாலமாக தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த போதை மாபியா தொடர்பாக கடந்த மாதம் ஜாபர் சாதிக் என்கிற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் மதுரையில் இரவு நேரத்தில் சில போதை இளைஞர்கள் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞரை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் பாபி சிம்ஹா நடித்த உறுமீன் மற்றும் பயணிகள் கவனிக்கவும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சக்திவேல், தானும் இது போன்று போதை ஆசாமிகளில் தாக்குதலுக்கு ஆளானதாக கூறி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, சில போதை ஆசாமிகள் தன்னிடம் வழி மறித்து வம்பு இழுத்து தாக்க முயற்சித்ததாகவும் அதே சமயம் அந்த நேரத்தில் பொதுமக்கள் உதவியுடன் தான் தப்பியதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு மற்றும் காவல்துறை இந்த போதை ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.