நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
சமீபகாலமாக தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த போதை மாபியா தொடர்பாக கடந்த மாதம் ஜாபர் சாதிக் என்கிற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் மதுரையில் இரவு நேரத்தில் சில போதை இளைஞர்கள் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞரை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் பாபி சிம்ஹா நடித்த உறுமீன் மற்றும் பயணிகள் கவனிக்கவும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சக்திவேல், தானும் இது போன்று போதை ஆசாமிகளில் தாக்குதலுக்கு ஆளானதாக கூறி ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, சில போதை ஆசாமிகள் தன்னிடம் வழி மறித்து வம்பு இழுத்து தாக்க முயற்சித்ததாகவும் அதே சமயம் அந்த நேரத்தில் பொதுமக்கள் உதவியுடன் தான் தப்பியதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு மற்றும் காவல்துறை இந்த போதை ஆசாமிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.