இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு | காதலர் பிரிவுக்கு பின் மீண்டும் சினிமாவில் முழு வேகத்தில் தமன்னா | மகன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா | விஜய் ஆண்டனியின் அடுத்த எதிர்பார்ப்பு ‛சக்தி திருமகன்' | பிளாஷ்பேக்: நம்பிக்கை தந்த 'நவரச நாயகன்' கார்த்திக்கின் 100வது திரைப்படம் | தள்ளிப்போகுதா கூலி பாடல் வெளியீட்டு விழா | தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு | அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? |
சின்னத்திரை நடிகை பிரியங்கா நல்காரி தனது காதலர் ராகுலை அவசர அவசரமாக திருமணம் முடித்தார். திருமணம் முடித்த கையோடு கணவருக்காக நடிப்பதை இனி கைவிடுவதாக சீரியலை விட்டு வெளியேறினார். ஆனால், சில நாட்களிலேயே கணவருடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்தார். அதன்பிறகு திடீரென நளதமயந்தி என்கிற புதிய தொடரில் மீண்டும் ஹீரோயினாக கமிட்டானார். அப்போது ஒரு முறை ரசிகர்ககளின் கேள்விக்கு பதிலளித்த ப்ரியங்கா நான் சிங்கிளாக இருப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் ராகுலை விட்டு ப்ரியங்கா பிரிந்துவிட்டதாக அனைவரும் நினைத்தனர். இந்நிலையில், ப்ரியங்கா தனது பிறந்தநாளை கணவர் ராகுலுடன் சேர்ந்து கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவர் குறித்து உருக்கமான ஹாஸ்டேக்குகளையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ராகுலுடன் ப்ரியங்கா இணைந்துவிட்டாரா? என அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர். மேலும், இந்த பிறந்தநாளுக்கு பிறகாவது இருவரும் சண்டையில்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் அட்வைஸ் செய்து வாழ்த்தி வருகின்றனர்.