ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சின்னத்திரை நடிகை பிரியங்கா நல்காரி தனது காதலர் ராகுலை அவசர அவசரமாக திருமணம் முடித்தார். திருமணம் முடித்த கையோடு கணவருக்காக நடிப்பதை இனி கைவிடுவதாக சீரியலை விட்டு வெளியேறினார். ஆனால், சில நாட்களிலேயே கணவருடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்தார். அதன்பிறகு திடீரென நளதமயந்தி என்கிற புதிய தொடரில் மீண்டும் ஹீரோயினாக கமிட்டானார். அப்போது ஒரு முறை ரசிகர்ககளின் கேள்விக்கு பதிலளித்த ப்ரியங்கா நான் சிங்கிளாக இருப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் ராகுலை விட்டு ப்ரியங்கா பிரிந்துவிட்டதாக அனைவரும் நினைத்தனர். இந்நிலையில், ப்ரியங்கா தனது பிறந்தநாளை கணவர் ராகுலுடன் சேர்ந்து கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவர் குறித்து உருக்கமான ஹாஸ்டேக்குகளையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ராகுலுடன் ப்ரியங்கா இணைந்துவிட்டாரா? என அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர். மேலும், இந்த பிறந்தநாளுக்கு பிறகாவது இருவரும் சண்டையில்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் அட்வைஸ் செய்து வாழ்த்தி வருகின்றனர்.