பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பவன் கல்யாண் முதன்முறையாக நடிக்கும் பீரியட் ஆக்ஷன் படம் 'ஹரி ஹர வீர மல்லு'. ஏ.எம்.ரத்னம் சிறு இடைவெளிக்கு பிறகு சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். 'காஞ்சே', 'கௌதமிபுத்ர சட்டகர்ணி' மற்றும் 'மணிகர்னிகா' போன்ற படங்களை இயக்கிய கிரிஷ் ஜகர்லமுடி இயக்கி உள்ளார்.
பவன் கல்யாண் உடன் நிதி அகர்வால், பாபி தியோல், சுனில், நோரா பதேஹி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசையமைக்கிறார். ஞானசேகர் விஎஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
17ம் நூற்றாண்டில் நடக்கும் ஆக்ஷன் அட்வென்சர் கதை என்பதால் அதற்கேற்றவாறு சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற பிரம்மாண்டமான செட்களை அமைத்து படமாக்கி வருகிறார்கள்.
இந்த படத்தின் பணிகளை விரைந்து முடிக்க தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்தின் மகனும், 'படையப்பா', 'நட்புக்காக' போன்ற படங்களின் எழுத்தாளரும், 'எனக்கு 20 உனக்கு 18', 'நீ மனசு எனக்கு தெலுசு', 'ஆக்ஸிஜன்' போன்ற படங்களை இயக்கியவருமான இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இரண்டாவது யூனிட்டின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கிரிஷ் ஜகர்லமுடி மேற்பார்வையில் ஜோதி கிருஷ்ணா முடிக்க உள்ளார். முந்தைய கமிட்மென்ட் மற்றும் படப்பிடிப்பில் எதிர்பாராத தாமதம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. படம் 2024ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகும்" என்று கூறப்பட்டுள்ளது.