பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி | 'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் |
தெலுங்கில் சத்ய தேவ் நடிக்கும் கிருஷ்ணம்மா என்கிற படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல தெலுங்கு இயக்குனர்களான ராஜமவுலி, அனில் ரவிபுடி, கொரட்டலா சிவா, கோபிசந்த் மாலினேனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேடையில் அனைவரும் ஒன்றாக நின்ற தருணத்தில் பாலகிருஷ்ணா நடித்த பகவத் கேசரி படத்தை இயக்கிய இயக்குனர் அனில் ரவிபுடி பேசும்போது அருகில் நின்ற இயக்குனர் கொரட்டலா சிவாவிடம் உங்களது தேவரா படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்று சொல்ல வேண்டும் என கேட்டார்.
அதேபோல இயக்குனர் ராஜமவுலியை பார்த்து மகேஷ் பாபுவை வைத்து நீங்கள் இயக்கும் படம் முதல் நாள் எப்படி இருக்கும் அது பற்றி நீங்கள் கூற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உடனே ராஜமவுலி ஜாலியாக கூட்டத்தினரை பார்த்து இவரை யாராவது வந்து அடித்தீர்கள் என்றால் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் தருவேன் என்று கலாட்டாவாக கூறினார். உடனே அனில் ரவிபுடி, அவ்வளவு எதற்கு இரண்டு ரூபாய் கொடுத்தாலே போதுமே என்று தன் தனது பங்கிற்கு காமெடி பண்ணி சமாளித்தார். இதற்கு முன்னதாக மகேஷ்பாபு நடித்த சரிலேறு நீக்கெவரு படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.