தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” | மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அஞ்சலி! | மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கும் ரெஜினா கசாண்ட்ரா! | இயக்குனர் செல்வராகவனை பிரிகிறாரா கீதாஞ்சலி? | அந்தோணி பாட்டு... கிராமத்து மெட்டு | ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! |

தெலுங்கில் சத்ய தேவ் நடிக்கும் கிருஷ்ணம்மா என்கிற படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல தெலுங்கு இயக்குனர்களான ராஜமவுலி, அனில் ரவிபுடி, கொரட்டலா சிவா, கோபிசந்த் மாலினேனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேடையில் அனைவரும் ஒன்றாக நின்ற தருணத்தில் பாலகிருஷ்ணா நடித்த பகவத் கேசரி படத்தை இயக்கிய இயக்குனர் அனில் ரவிபுடி பேசும்போது அருகில் நின்ற இயக்குனர் கொரட்டலா சிவாவிடம் உங்களது தேவரா படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்று சொல்ல வேண்டும் என கேட்டார்.
அதேபோல இயக்குனர் ராஜமவுலியை பார்த்து மகேஷ் பாபுவை வைத்து நீங்கள் இயக்கும் படம் முதல் நாள் எப்படி இருக்கும் அது பற்றி நீங்கள் கூற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உடனே ராஜமவுலி ஜாலியாக கூட்டத்தினரை பார்த்து இவரை யாராவது வந்து அடித்தீர்கள் என்றால் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் தருவேன் என்று கலாட்டாவாக கூறினார். உடனே அனில் ரவிபுடி, அவ்வளவு எதற்கு இரண்டு ரூபாய் கொடுத்தாலே போதுமே என்று தன் தனது பங்கிற்கு காமெடி பண்ணி சமாளித்தார். இதற்கு முன்னதாக மகேஷ்பாபு நடித்த சரிலேறு நீக்கெவரு படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




