ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி | இந்தியாவில் அதிக பிரபலமான நடிகைகள் : டாப் 10ல் தென்னிந்திய நடிகைகள் ஆதிக்கம் | இந்தியாவின் அதிக பிரபல நடிகர் : நம்பர் 1 விஜய், நம்பர் 6 அஜித்குமார் | ஜுன் 9ல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 66 கோடி வசூலித்ததாக அறிவிப்பு | அதிதி ஷங்கரைப் பாராட்டிய எஸ்ஜே சூர்யா | 10 கதாநாயகிகள் கலந்து கொள்ளும் 'லெஜன்ட்' இசை வெளியீட்டு விழா | விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் |
படம் : வெயில்
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : பசுபதி, பரத், பாவனா, ஸ்ரேயா ரெட்டி, மாளவிகா
இயக்கம் : வசந்தபாலன்
தயாரிப்பு : எஸ் பிக் ஷர்ஸ்-
தோற்றவனின் கதையை உணர்வுப்பூர்வமாக கொடுத்து, மாபெரும் வெற்றி பெற்றது, வெயில்! இயக்குனர் ஷங்கர், தன் சிஷ்யர் வசந்தபாலனுக்காக, இப்படத்தை தயாரித்தார். தன் நிஜ வாழ்க்கையில் இருந்தே, வெயில் படத்தின் கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார், வசந்தபாலன்.
விருதுநகரில், தான் வாழ்ந்த குழந்தை பருவத்தை பற்றி, கதாநாயகன் முருகேசன் சொல்வது போல் படம் ஆரம்பமாகிறது. தந்தையின் கண்டிப்புக்கு பயந்து, இளம் பருவத்தில் வீட்டில் இருந்து வெளியேறும் முருகேசன், தியேட்டர் ஒன்றில் பணி செய்கிறார். அங்கு அவருக்கு காதல் கிடைத்து, கை நழுவுகிறது; தியேட்டரும் மூடப்படுகிறது. தோல்வியுற்ற மனிதனாக, 20 ஆண்டுகளுக்கு பின், சொந்த ஊர் திரும்பும் முருகேசன், சந்திக்கும் சோதனைக்களம் தான், படத்தின் இரண்டாம் பகுதி.
விருதுநகர் மக்களின் கிராமிய வாழ்வியலை, அப்படியே படம் பிடித்திருந்தனர். முருகேசனாக, பசுபதி வாழ்ந்திருந்தார். அவரது வாழ்நாள் கதாபாத்திரம் அது. சொந்த ஊரில் கால் பதிக்கும்போது ஏற்படும் நடுக்கம் முதல், தம்பியிடம் அறிமுகமாகும் காட்சி வரை, அவ்வளவு துல்லியமாக, முருகேசன் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஜி.வி.பிரகாஷ்குமார், இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே, உருகுதே மருகுதே, வெயிலோடு விளையாடி... உள்ளிட்ட அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார். நா.முத்துக்குமாரின் வரிகளில், வெயிலோடு விளையாடி... பாடல், நம் பால்ய காலத்தை நினைவூட்டியது.
மதியின் கேமரா, விருதுநகரின் வெக்கையை அற்புதமாக படம்பிடித்தது. வறட்டு பிடிவாதமிக்க தந்தையாக, ஜி.எம்.குமார், தம்பியாக பரத், பசுபதியின் பால்யகால தோழி ஸ்ரேயா என, படத்தில் இடம்பெற்ற முக்கிய கதாபாத்திரங்கள், அழுத்தமாக உருவாக்கப்பட்டிருந்தன.
வெயில், நம் நெஞ்சை சுட்டது!