மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
படம் : திமிரு
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : விஷால், ரீமா சென், ஷ்ரேயா ரெட்டி, வடிவேலு
இயக்கம் : தருண் கோபி
தயாரிப்பு : ஜீ.கே.பிலிம்ஸ் கார்ப்பரேஷன்
செல்லமே படத்தில் அறிமுகமான நடிகர் விஷால், சண்டக்கோழியைத் தொடர்ந்து, இப்படத்தின் மூலம், 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார். இதன் மூலம், முன்னணி கதாநாயகரில் ஒருவரானார்.
மதுரையிலிருந்து, சென்னையில் உள்ள கல்லுாரியில் மருத்துவம் படிக்க வருகிறார் விஷால். ரவுடி கும்பல், விஷாலைத் தேடுகிறது. இதற்கிடையில் ரீமா சென், விஷாலை துரத்தி துரத்தி காதலிக்கிறார். இந்நிலையில் ரவுடி கும்பலுக்கும், விஷாலுக்கும் மோதல் ஏற்படுகிறது. ஏன் என்ற கேள்விக்கு பின், மதுரையில், பிரபல தாதாவின் தங்கை ஸ்ரேயா ரெட்டி, விஷால் மீது காதல் கொள்கிறார். எதிர்பாராத விபத்தில், ஸ்ரேயா ரெட்டி உயிரிழக்க, அவரின் அண்ணன்கள், விஷாலை கொலை செய்ய தேடுகின்றனர். விஷால் தப்பித்தாரா, ரீமா சென்னின் காதல் என்னவானது என்பது தான், கிளைமேக்ஸ்!
இப்படத்தில், மிகச் சரியான அளவில், ஆக் ஷன் மசாலா கலந்திருந்தது. படத்தின் மிகப்பெரிய பலமே, ஸ்ரேயா ரெட்டியின் ஈஸ்வரி கதாபாத்திரம் தான். 'ஏலேய் இசுக்கு, நல்லா இருக்கியாலே...' என, அவர் விடும் சத்தம், இன்றும் பலரது காதில் ஒலிக்கும். கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி கதாபாத்திரம் தான் என்றாலும், வித்தியாசம் காட்டி, மிரட்டிஇருந்தார், ஸ்ரேயா ரெட்டி.
இப்படத்தின் தயாரிப்பாளரான விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து, ஸ்ரேயா ரெட்டி திருமணம் செய்துக் கொண்டார். ஒதுங்கி வாழும் விஷாலின் பிளாஷ்பேக், அவரின் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்தது. வடிவேலுவின் காமெடி ரசிக்க செய்தது. படம், மிகப்பெரிய வெற்றி பெற்று, வசூல் மழையில் நனைந்தது.
இயக்குனர் தருண் கோபி, சில படங்களை எடுத்து தோல்வியை தழுவி, பின் நடிகராகவும் பரிணாமித்தார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு, சிறந்த கலைஞர்கள் பலர் கிடைப்பர் என, எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அது பொய்த்து போனது, சோகம் தான்.
'நானும் மதுரைக்காரன் தான்டா' என, விஷால் திமிரு காட்டினார்!