ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

படம் : வெயில்
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : பசுபதி, பரத், பாவனா, ஸ்ரேயா ரெட்டி, மாளவிகா
இயக்கம் : வசந்தபாலன்
தயாரிப்பு : எஸ் பிக் ஷர்ஸ்-
தோற்றவனின் கதையை உணர்வுப்பூர்வமாக கொடுத்து, மாபெரும் வெற்றி பெற்றது, வெயில்! இயக்குனர் ஷங்கர், தன் சிஷ்யர் வசந்தபாலனுக்காக, இப்படத்தை தயாரித்தார். தன் நிஜ வாழ்க்கையில் இருந்தே, வெயில் படத்தின் கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார், வசந்தபாலன்.
விருதுநகரில், தான் வாழ்ந்த குழந்தை பருவத்தை பற்றி, கதாநாயகன் முருகேசன் சொல்வது போல் படம் ஆரம்பமாகிறது. தந்தையின் கண்டிப்புக்கு பயந்து, இளம் பருவத்தில் வீட்டில் இருந்து வெளியேறும் முருகேசன், தியேட்டர் ஒன்றில் பணி செய்கிறார். அங்கு அவருக்கு காதல் கிடைத்து, கை நழுவுகிறது; தியேட்டரும் மூடப்படுகிறது. தோல்வியுற்ற மனிதனாக, 20 ஆண்டுகளுக்கு பின், சொந்த ஊர் திரும்பும் முருகேசன், சந்திக்கும் சோதனைக்களம் தான், படத்தின் இரண்டாம் பகுதி.
விருதுநகர் மக்களின் கிராமிய வாழ்வியலை, அப்படியே படம் பிடித்திருந்தனர். முருகேசனாக, பசுபதி வாழ்ந்திருந்தார். அவரது வாழ்நாள் கதாபாத்திரம் அது. சொந்த ஊரில் கால் பதிக்கும்போது ஏற்படும் நடுக்கம் முதல், தம்பியிடம் அறிமுகமாகும் காட்சி வரை, அவ்வளவு துல்லியமாக, முருகேசன் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஜி.வி.பிரகாஷ்குமார், இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே, உருகுதே மருகுதே, வெயிலோடு விளையாடி... உள்ளிட்ட அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார். நா.முத்துக்குமாரின் வரிகளில், வெயிலோடு விளையாடி... பாடல், நம் பால்ய காலத்தை நினைவூட்டியது.
மதியின் கேமரா, விருதுநகரின் வெக்கையை அற்புதமாக படம்பிடித்தது. வறட்டு பிடிவாதமிக்க தந்தையாக, ஜி.எம்.குமார், தம்பியாக பரத், பசுபதியின் பால்யகால தோழி ஸ்ரேயா என, படத்தில் இடம்பெற்ற முக்கிய கதாபாத்திரங்கள், அழுத்தமாக உருவாக்கப்பட்டிருந்தன.
வெயில், நம் நெஞ்சை சுட்டது!