துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! |

இயக்குனர் பாரதி கண்ணன் போக்சோ சட்டத்தில் கைது என தகவல் கசிந்தன. சில மீடியாக்களில் பாரதி கண்ணன் கைது என செய்தி வர, நான் அவனில்லை என்று விளக்கம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாரதிகண்ணன்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் அருவா வேலு, கண்ணத்தாள், திருநெல்வேலி, பண்ணாரி அம்மன், கரகாட்டக்காரி உள்ளிட்ட 10க்கும் அதிகமான இயக்கி உள்ளேன். நேற்று பாரதி கண்ணன் என்ற துணை நடிகர் பாலியல் வழக்கில் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு போலீசார் இது குறித்து தகவல் செய்தி அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் சிலர் பெயரை தவறாக புரிந்து கொண்டு என் போட்டோவுடன் செய்தி பிரசுரம் செய்து உள்ளனர். அது என் குடும்பத்தினருக்கு மன வருத்தம் கொடுத்துள்ளது. இதுவரை நான் வம்பு வழக்கில் சிக்கியது இல்லை. நான் வேறு, அந்த பாரதி கண்ணன் வேறு. அந்த வழக்கிற்கும் எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. செய்தியை தவறாக வெளியிட்டவர்களும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்'' என கூறியுள்ளார்.