பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்த தாய் கிழவி படம் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது மட்டுமல்ல, இதுவரை முப்பது கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி உள்ளது. கடந்த வாரமே தாய்கிழவி பட குழுவினர் கேக் வெட்டி அந்த வெற்றியை கொண்டாடி உள்ளனர். மேலும் மகளிர் தினமான நேற்று தமிழகத்தில் பலரின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்ட்ஸில் தாய்கிழவி படத்தில் பெண்கள் குறித்து ராதிகா பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. இதுவும் படக்குழுவை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை தாய்கிழவி படத்தின் வெற்றி விழாவை சென்னையில் பெரிய அளவில் கொண்டாட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இந்த படம் நல்ல லாபத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளதால் அவரும் வெற்றியை கொண்டாட ஆசைப்படுகிறார் அந்த விழாவில் படத்தில் பங்குபெற்ற சென்னை மற்றும் மதுரை சேர்ந்த நடிகர்களும் , தொழில் நுட்ப கலைஞர்களும் பங்கு பெற உள்ளனர். தமிழ் சினிமாவில் தம்பி தலைவர் தலைமையில் படத்துக்கு பின் இந்த ஆண்டு இரண்டாவதாக இந்த படத்தின் வெற்றி விழா நடக்கிறது.




