கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

விஜய் நடித்துள்ள ‛ஜனநாயகன்' படத்தின் ரீ சென்சார் இன்று மதியம் நடக்க இருந்த நிலையில் திடீரென படம் பார்ப்பதை சென்சார் போர்டு ஒத்தி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறுகையில், ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய ஜன நாயகன் படம் கோர்ட், சட்ட சிக்கல், சென்சார் பிரச்னை காரணமாக கடந்த 2 மாதமாக தவித்து வருகிறது. முதலில் சட்டபிரச்னைகளை முடித்து, வழக்கை வாபஸ் வாங்கியது படக்குழு. அதனால் இன்று. மாலை ரீ சென்சாருக்கு ஏற்பாடுகள் நடந்தன.
புது சென்சார் போர்டு உறுப்பினர்கள் படம் பார்க்க இருந்தனர். விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் என படக்குழுவினர் ஆர்வமாக இருந்தனர். ஆனால் சிலருக்கு உடல்நல பிரச்னை ஏற்பட, அவர்கள் வர முடியாத காரணத்தால் இன்று அவர்கள் படம் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இன்று நடக்க இருந்த ரீ சென்சார் ரத்தான நிலையில் மார்ச்17ம் தேதி ஜன நாயகன் ரீ சென்சார் பணிகள் நடக்கும் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் பட ரிலீஸ் மேலும் தாமதம் ஆக வாய்ப்புள்ளது.
இது தற்காலிக பிரச்னை தான். விரைவில் படம் பார்ப்பார்கள், ஆனால் படம் எப்போது ரிலீஸ் என்பதை படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும். மார்ச் 18ல் ஜனநாயகன் வர வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். அது நடக்குமா, மீண்டும் சென்சார் பிரச்னை வருமா என தெரியவில்லை என்கிறார்கள்.




