மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் 'ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன., 9ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் தணிக்கை பிரச்னையில் படம் சிக்கி கோர்ட் வரை சென்றதால் படம் வெளியாகவில்லை.
பின்னர் இந்த வழக்கை தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றது. இதையடுத்து, மார்ச் 9ம் தேதி சென்னையில் ‛ஜனநாயகன்' படத்தின் மறு தணிக்கை நடக்க இருந்தது. ஆனால் சென்சார் போர்டு குழுவினர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட கடைசி நேரத்தில் ரத்தானது.
இந்நிலையில் ரத்தான அந்த மறு தணிக்கை இன்று சென்னையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் மறு தணிக்கை நடக்கவில்லை. மும்பை அல்லது ஆந்திராவில் இருந்து சிறப்பு தணிக்கை குழுவினர் படத்தை பார்ப்பதாக சொன்னார்கள். ஆனால் இன்று படக்குழுவுக்கு அழைப்பு சென்சார் தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லையாம். தற்போதைய சூழலில் படம் எப்போது மறு தணிக்கைக்கு வருகிறது என்பதே தெரியவில்லை என்கிறார்கள்.