பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படம் 'ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன., 9ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் தணிக்கை பிரச்னையில் படம் சிக்கி கோர்ட் வரை சென்றதால் படம் வெளியாகவில்லை.
பின்னர் இந்த வழக்கை தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றது. இதையடுத்து, மார்ச் 9ம் தேதி சென்னையில் ‛ஜனநாயகன்' படத்தின் மறு தணிக்கை நடக்க இருந்தது. ஆனால் சென்சார் போர்டு குழுவினர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட கடைசி நேரத்தில் ரத்தானது.
இந்நிலையில் ரத்தான அந்த மறு தணிக்கை இன்று சென்னையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் மறு தணிக்கை நடக்கவில்லை. மும்பை அல்லது ஆந்திராவில் இருந்து சிறப்பு தணிக்கை குழுவினர் படத்தை பார்ப்பதாக சொன்னார்கள். ஆனால் இன்று படக்குழுவுக்கு அழைப்பு சென்சார் தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லையாம். தற்போதைய சூழலில் படம் எப்போது மறு தணிக்கைக்கு வருகிறது என்பதே தெரியவில்லை என்கிறார்கள்.




