இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே, 27. தீவானாபேன் என்ற போஜ்புரி படத்தில் நடித்தார். சில ஹிந்தி படங்கள் மற்றும் டிவி ஷோக்களிலும் நடித்துள்ளார். கணவர் சந்திரமணி ஜன்கட் உடன் மும்பையில் இவர் வசித்து வந்தார். தனது சகோதரியின் திருமணத்திற்காக பீஹாரில் உள்ள பாகல்பூருக்கு வந்திருந்தார். குடும்பத்தினர் உடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிய நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு அம்ரிதா தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன் அம்ரிதா தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‛‛அவளது வாழ்க்கை இரு படகுகளில் இருக்கிறது. என் படகை மூழ்கடித்து அவள் வாழ்க்கையை எளிதாக்கினேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
அம்ரிதாவின் தற்கொலை பற்றி குடும்பத்தினர் கூறுகையில், போதிய பட வாய்ப்பு இல்லாததால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். அதனால் கூட தற்கொலை செய்திருக்கலாம் என்கிறார்கள்.