ஏப்ரல் 27ல் தொடங்குகிறது சேயோன் | அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான் | கென் கருணாஸ் சினிமாவின் சொத்து : யூத் படம் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டி பாராட்டு | பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம் | 17 நாட்களிலேயே 200 கோடி வசூலித்த 'வாழ 2' | பேட்ரியாட்டில் நாலு ஹீரோ இல்லை, இரண்டு பேர் தான் : மம்முட்டி | ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்! | ‛கலை அரசன்', தனுஷிற்கு புதுபட்டம் | கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் |

பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே, 27. தீவானாபேன் என்ற போஜ்புரி படத்தில் நடித்தார். சில ஹிந்தி படங்கள் மற்றும் டிவி ஷோக்களிலும் நடித்துள்ளார். கணவர் சந்திரமணி ஜன்கட் உடன் மும்பையில் இவர் வசித்து வந்தார். தனது சகோதரியின் திருமணத்திற்காக பீஹாரில் உள்ள பாகல்பூருக்கு வந்திருந்தார். குடும்பத்தினர் உடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிய நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு அம்ரிதா தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு முன் அம்ரிதா தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‛‛அவளது வாழ்க்கை இரு படகுகளில் இருக்கிறது. என் படகை மூழ்கடித்து அவள் வாழ்க்கையை எளிதாக்கினேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
அம்ரிதாவின் தற்கொலை பற்றி குடும்பத்தினர் கூறுகையில், போதிய பட வாய்ப்பு இல்லாததால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். அதனால் கூட தற்கொலை செய்திருக்கலாம் என்கிறார்கள்.




