சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
சின்னத்திரையில் அனைத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சின்னத்திரை விருது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சின்னத்திரை 2023ம் ஆண்டிற்கான விருது விழா அண்மையில் தான் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சிறந்த தொலைக்காட்சி தொடருக்கான விருதை எதிர்நீச்சல் தொடர் பெற்றுள்ளது.
இதனையடுத்து விருதை பெற்றுக்கொண்ட இயக்குநர் திருச்செல்வம், 'எல்லோருடைய வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது தான் எதிர்நீச்சல். கோலங்கள் தொடருக்கு பின் எனக்கு இந்த வாய்ப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்த தொலைக்காட்சிக்கு நன்றி. இந்த தொடர் இவ்வளவு பெரிய இடத்தை பிடிக்க காரணம் இந்த தொடருக்கு வசனம் எழுதிய ஸ்ரீவித்யா தான்' என கூறினார். அதன்பிறகு தொகுப்பாளர் அர்ச்சனா எதிர்நீச்சல் 2 வருமா? என கேட்க, அதற்கு பதிலளித்த திருச்செல்வம் 'எதிர்நீச்சல் எப்பொழுதும் வரும், எப்பொழுதும் இருக்கும்' என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.