ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ‛சிறகடிக்க ஆசை'. இந்த தொடர் உட்பட பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை ராஜேஸ்வரி, 39. சென்னை, பிராட்வேயில் கணவருடன் வசித்து வந்தார். இவர் திடீரென அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கணவருக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஞாயிறு அன்று சைதாப்பேட்டையில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் ராஜேஸ்வரி. மன உளைச்சலில் இருந்த இவர் மாத்திரையை அதிகளவு உண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டிவி நடிகை தற்கொலை செய்த சம்பவம் சின்னத்திரை பிரபலங்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




