நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி நடித்துள்ள ‛வா வாத்தியார்' படம் இன்று(டிச., 12) ரிலீஸாக வேண்டியது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பெற்ற கடன் பிரச்னையால் கோர்ட் உத்தரவால் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது. முன்னதாக இப்பட ரிலீஸையொட்டி கார்த்தி பல பேட்டிகளை அளித்தார். அதில் ஒரு பேட்டியில் அவரது முந்தைய படமான மெய்யழகன் குறித்து பேசி உள்ளார். குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு விமர்சகர்கள் குறித்து பிரேம்குமார் கடுமையாக பேசியதை கேள்வியாக எழுப்பினர்.
அதற்கு கார்த்தி கூறியதாவது : ‛‛இயக்குனர் பிரேம்குமார் தமிழ் ரசிகர்கள் மீது கோபப்படவில்லை. ஆனால், அந்த படத்தை முதிர்ச்சியற்ற சில யுடியூபர்கள் செய்த விமர்சனங்கள் மீது தான் கோபப்பட்டார். மெய்யழகன் திரைப்படம் இதைவிடப் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டியது. அது போன்ற படங்களைத் தயாரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்களை இது ஊக்குவித்திருக்கும். அது நடக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.