'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'யமகாதகி' புகழ் ரூபா | துரந்தர் காட்சி : மன்னிப்பு கேட்ட மாதவன் | பிளாஷ்பேக் : திருமண வாழ்க்கை தோல்வியால் ஒளிப்பதிவாளரான விஜயலட்சுமி | பிளாஷ்பேக் : ஒரே படத்தின் லாபத்தில் ஸ்டூடியோ கட்டிய தயாரிப்பாளர் | குஷ்புவை தொடர்ந்து கணவர் சுந்தர் சியும் அரசியலில் களமிறக்கம் : மதுரை மத்தியில் போட்டி | ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் டிரைலர் ; ஸ்படைர்மேன் : பிராண்ட் நியூ டே | 'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி | ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி |

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி நடித்துள்ள ‛வா வாத்தியார்' படம் இன்று(டிச., 12) ரிலீஸாக வேண்டியது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பெற்ற கடன் பிரச்னையால் கோர்ட் உத்தரவால் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது. முன்னதாக இப்பட ரிலீஸையொட்டி கார்த்தி பல பேட்டிகளை அளித்தார். அதில் ஒரு பேட்டியில் அவரது முந்தைய படமான மெய்யழகன் குறித்து பேசி உள்ளார். குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு விமர்சகர்கள் குறித்து பிரேம்குமார் கடுமையாக பேசியதை கேள்வியாக எழுப்பினர்.
அதற்கு கார்த்தி கூறியதாவது : ‛‛இயக்குனர் பிரேம்குமார் தமிழ் ரசிகர்கள் மீது கோபப்படவில்லை. ஆனால், அந்த படத்தை முதிர்ச்சியற்ற சில யுடியூபர்கள் செய்த விமர்சனங்கள் மீது தான் கோபப்பட்டார். மெய்யழகன் திரைப்படம் இதைவிடப் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டியது. அது போன்ற படங்களைத் தயாரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்களை இது ஊக்குவித்திருக்கும். அது நடக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.