நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடர் சூப்பர் ஹிட்டானது. அந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் வில்லன் கதாபாத்திரத்தில் ஆதியாக நடித்த அஜய் கபூரும் ஒருவர் சொல்லலாம். இதனை தொடர்ந்து எதிர்நீச்சல் தொடரிலும் மிகவும் வலுவான வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார் திருச்செல்வம். ஆனால், அந்த தொடரில் தவிர்க்க முடியாத காரணங்களால் சீக்கிரமே முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், எதிர்நீச்சல் சீசன் 2 அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையில் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல புதிய கதாபாத்திரங்களும், நடிகர்களும் அறிமுகமாகியுள்ள இந்த தொடரில் கோலங்கள் ஆதியும் நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு காரணம் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் பிரியதர்ஷினி அஜய் கபூருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே, ஆதி-திருச்செல்வம் காம்போ எதிர்நீச்சல் 2விலும் தொடருமா? என பல ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.