மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடர் சூப்பர் ஹிட்டானது. அந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் வில்லன் கதாபாத்திரத்தில் ஆதியாக நடித்த அஜய் கபூரும் ஒருவர் சொல்லலாம். இதனை தொடர்ந்து எதிர்நீச்சல் தொடரிலும் மிகவும் வலுவான வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார் திருச்செல்வம். ஆனால், அந்த தொடரில் தவிர்க்க முடியாத காரணங்களால் சீக்கிரமே முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், எதிர்நீச்சல் சீசன் 2 அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையில் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல புதிய கதாபாத்திரங்களும், நடிகர்களும் அறிமுகமாகியுள்ள இந்த தொடரில் கோலங்கள் ஆதியும் நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு காரணம் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் பிரியதர்ஷினி அஜய் கபூருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே, ஆதி-திருச்செல்வம் காம்போ எதிர்நீச்சல் 2விலும் தொடருமா? என பல ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.