ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் கூறுகையில், ''ராஜேஷ்வரி தனிப்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக இப்படி செய்துள்ளார். அவர் மன அழுத்ததில் இருந்து இருக்கிறார். அந்த சூழ்நிலையில் தவறாக முடிவெடுத்துள்ளார். இப்படி பிரச்னையில் இருக்கும் சங்க பெண் உறுப்பினர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 5 பெண் உறுப்பினர்கள் கொண்ட பெண்கள் அணி அமைக்கப்பட உள்ளது. அந்த குழு சங்க உறுப்பினர்களின் நலனுக்காக செயல்படும். விரைவில் அந்த குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது'' என்றார்.