ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

'பார்க்' (பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்) என்ற அமைப்புதான் தொலைக்காட்சி சேனல்களுக்கு ரேட்டிங் வழங்கும். தொலைக்காட்சியை பார்க்கும் பார்வையாளர்களை கவனித்து பொழுதுபோக்கு மற்றும் செய்திச் சேனல்களில் எவை ரசிகர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறது என்பதை வாராவாரம் கணக்கிட்டு டிஆர்பி ரேட்டைவழங்கும். இந்த அமைப்பு வழங்கும் ரேட்டிங் புள்ளிகளை வைத்தே டிவி சேனல்களுக்கு விளம்பர வருவாய் வரும்.
இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது இந்த அமைப்பு. தற்போது வளைகுடா நாடுகளில் யுத்த சூழ்நிலை நிலவுவதால் செய்தி சேனல்கள் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக செய்திகளை பரபரப்பாக, மக்களை பதட்டமடைய செய்யும் வகையில் வெளியிடுவதை தடுக்கும் வகையில் 'பார்க்' அமைப்பு செய்தி சேனல்களுக்க டிஆர்பி ரேட்டிங்கை வழக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்த அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது, செய்திச் சேனல்களின் நிகழ்ச்சிகள் தொடர்பான ரேட்டிங் விபரங்களை அடுத்த நான்கு வாரங்களுக்கு அல்லது அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை வெளியிட வேண்டாம் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.




