20 அடி ஆழத்தில் ஆடையின்றி நடித்த ஆர்யா | பிளாஷ்பேக்: மாற்றங்கள் பல கடந்து, மகத்தான வெற்றியைப் பதிவு செய்த எம் ஜி ஆரின் “ரிக்ஷாக்காரன்” | போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள 'முதற்கனல்' | சமந்தா படத்தின் முதல் சிங்கிள் ஏப்., 19ல் வெளியீடு | ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புராண படம் | 'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? அந்த 3 இயக்குனர்களும் பிஸியாமே? | ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் |

'பார்க்' (பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்) என்ற அமைப்புதான் தொலைக்காட்சி சேனல்களுக்கு ரேட்டிங் வழங்கும். தொலைக்காட்சியை பார்க்கும் பார்வையாளர்களை கவனித்து பொழுதுபோக்கு மற்றும் செய்திச் சேனல்களில் எவை ரசிகர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறது என்பதை வாராவாரம் கணக்கிட்டு டிஆர்பி ரேட்டைவழங்கும். இந்த அமைப்பு வழங்கும் ரேட்டிங் புள்ளிகளை வைத்தே டிவி சேனல்களுக்கு விளம்பர வருவாய் வரும்.
இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது இந்த அமைப்பு. தற்போது வளைகுடா நாடுகளில் யுத்த சூழ்நிலை நிலவுவதால் செய்தி சேனல்கள் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக செய்திகளை பரபரப்பாக, மக்களை பதட்டமடைய செய்யும் வகையில் வெளியிடுவதை தடுக்கும் வகையில் 'பார்க்' அமைப்பு செய்தி சேனல்களுக்க டிஆர்பி ரேட்டிங்கை வழக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்த அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது, செய்திச் சேனல்களின் நிகழ்ச்சிகள் தொடர்பான ரேட்டிங் விபரங்களை அடுத்த நான்கு வாரங்களுக்கு அல்லது அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை வெளியிட வேண்டாம் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.




