'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் | 'கர' படத்தில் ரவிக்குமார், சுராஜ், கருணாஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு |

சின்னத்திரை நடிகை சுபிக்ஷா தற்போது 'வீரா' என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் 'பேமிலி படம்' என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. அதில் சுபிக்ஷாவின் நடிப்பும் பேசப்பட்டது. அடுத்த வாய்ப்புகள் அமையாததால் தற்போதும் அவர் 'வீரா' தொடரில் நடித்து வருகிறார்.
ஆனால் விரைவில் 'வீரா' தொடரில் சுபிக்ஷாவின் கேரக்டர் முடியப்போகிறது என்றும் அவராகவே விலகி கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுபிக்ஷா கூறியிருப்பதாவது:
வீரா தொடரில் திட்டமிட்டபடி எனது கேரக்டர் முடிவிற்கு வருகிறது. நான் விரும்பினால் கேரக்டரை நீட்டிப்பதாக சொன்னார்கள் வேண்டாம் என்று கூறிவிட்டேன். தயாரிப்பு தரப்பு, சேனல் தரப்பு இரண்டிடமும் சுமுகமாக பேசி மகிழ்ச்சியாக விலகுகிறேன். காரணம் இப்போது எனக்கு சினிமா, வெப் தொடர் வாய்ப்புகள் அதிகம் வருகிறது. அதோடு நான் யோகி பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படம் விரைவில் வெளிவருகிறது. அந்த படம் எனக்கு ஒரு திருப்பத்தை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றார்.




