Advertisement

சிறப்புச்செய்திகள்

காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில்

19 ஜன, 2026 - 06:18 IST
எழுத்தின் அளவு:
Rashmika-Mandanna-breaks-silence-on-why-Salman-Khans-Sikandar-failed:-When-I-heard-the-script,-it-was-quite-different
Advertisement


கடந்த வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் ஹிந்தியில் 'சிக்கந்தர்' என்கிற படம் வெளியானது. ராஷ்மிகா மந்தனா இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் தோல்வியை தழுவியது. சிக்கந்தர் படத்தை எடுத்துக் கொண்டிருந்த சமயத்திலேயே சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியதால் சிக்கந்தர் படத்தில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று ஒரு பக்கம் குற்றச்சாட்டாக சொல்லப்பட்டது.

அதன்பிறகு ஒரு பேட்டியில் சிக்கந்தர் படத்தின் தோல்வி குறித்து வெளிப்படையாக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், சல்மான்கானின் படப்பிடிப்பு வசதிக்காக நேரங்கள் மாற்றப்பட்டதும் அவரது விருப்பப்படி கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதும் தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் சிக்கந்தர் படம் பற்றி பேசும்போது, “அந்தப் படத்திற்காக ஏ.ஆர் முருகதாஸ் என்னிடம் சொன்ன கதை வேறு. படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட கதை அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டிருந்தது. முதலில் ஏ.ஆர் முருகதாஸ் சொன்ன கதை ரொம்பவே வித்தியாசமாக, என்னை ஈர்ப்பதாக இருந்தது. எதனால் இந்த மாற்றம் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.

சில நேரங்களில் நடிப்புத்திறமை, படத்தொகுப்பு படமாக்கப்படும் காலம் இவற்றையெல்லாம் பொறுத்துக் கூட சில படங்களுக்கு மாற்றம் நிகழும். சிக்கந்தர் படத்திலும் அதுதான் நிகழ்ந்தது என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். அவரது கருத்துப்படி ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் உருவாக்கியிருந்த கதையை படமாகி இருந்தால் சிக்கந்தர் வெற்றி கோட்டை தொட்டிருக்கும் என்பது போலத்தான் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில்வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் ... இளையராஜாவுக்கு பத்மபாணி விருது இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap