வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மான் ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஹிந்தி சினிமாவில் அவருக்கு வரும் வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணமாக சில விஷயங்களை குறிப்பிட்டார். ஆனால் அது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அதற்காக விளக்கமும் அளித்தார்.
இந்த நிலையில் பாலிவுட் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர், “ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த கருத்துக்கள் ரொம்பவே புண்படுத்துவதாக இருக்கிறது. ஒருமுறை அவரை சேனல் ஒன்றுக்காக பேட்டி எடுத்தபோது அவரிடம் அவரது 'மா துஜே சலாம்' என்கிற 'வந்தே மாதரம்' பாடலை ஒரு சில வரிகளாவது பாடுங்கள் அல்லது ஹம்மிங்காவது செய்யுங்கள் என்று கூறினேன்.. ஆனால் அதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.. பொதுவாக இசைக் கலைஞர்கள் இது போன்ற பேட்டிகளில் இப்படி பாடுவதை புறக்கணிக்க மாட்டார்கள் என்பதால் அவரது செயல் என்னை ரொம்பவே அப்செட் ஆக்கியது” என்று எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலடி விளக்கம் கொடுக்கும் விதமாக பின்னணி பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, “ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 2025 நவம்பரில் புனேயில் ஆர்கே லக்ஷ்மனின் நினைவு அவார்டு கான்சர்ட்டில் கூட 'மா துஜே சலாம்' பாடலை பாடினார். அது மட்டுமல்ல அவரது ஒவ்வொரு கான்சர்ட்டிலும் கூட அவர் இந்த பாடலை தவறாது பாடி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு இது நன்றாகவே தெரியும்.
மேற்படி நிகழ்ச்சி தொகுப்பாளரின் பேட்டியின் போது, அவருக்கு ஒரு வேளை பாடுவதற்கு குரல் சரி இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது அப்போது பாடுவது சரியாக இருக்காது என்று அவர் நினைத்திருக்கலாமே தவிர அவர் ஒருபோதும் வந்தே மாதரம் பாடலை புறக்கணித்தது இல்லை” என்று கூறியுள்ளார்.




