2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, தெலுங்கு, ஹிந்தியில் பிஸியானார். தற்போது மீண்டும் தமிழ் பக்கம் திரும்பிய அவர் விஜயின் 'பீஸ்ட்', சூர்யாவின் 'ரெட்ரோ' படத்தில் நாயகியாக நடித்தார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த 'கூலி' படத்தில் 'மோனிகா பெலுசி' என்ற பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.
தற்போது எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில், பூஜா ஹெக்டே சொன்னதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில், ''சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான் இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ என்னுடைய கேரவனில் அனுமதியின்றி நுழைந்து எல்லை மீறி என்னை தொட முயன்றார். உடனடியாக அவரை நான் கன்னத்தில் அறைந்தேன். அந்த சம்பவத்திற்கு பின் அவர் மீண்டும் என்னுடன் பணிபுரியவில்லை" என அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
பூஜா ஹெக்டே குறிப்பிடும் நபர், 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்த பிரபாஸ் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த செய்தி முற்றிலும் போலியானது, பூஜா ஹெக்டே எங்கும் இதுப்பற்றி சொல்லவில்லை என்றும் சிலர் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கு பூஜா ஹெக்டே முன்வந்து விளக்கமளித்தால் தான் உண்மை தெரியவரும்.




