சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடர் மக்களின் மனதை வென்று டாப் இடத்தை பிடித்தது. இந்த தொடரில் ஹீரோயினாக நடித்த மதுமிதாவுக்கு மிகப்பெரும் அளவில் பெயர் புகழ் கிடைத்து தமிழ் சின்னத்திரையில் முன்னணி ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்தார். எதிர்நீச்சல் -2 தொடருக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இதிலும் மதுமிதாவே ஹீரோயினாக நடிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் எதிர்நீச்சல் 2 வில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். அ
வர் இன்று, (அக்டோபர் 2) வெளியிட்டுள்ள பதிவில், 'சில காரணங்களுக்காக நான் எதிர்நீச்சல் 2 தொடரில் தொடரப்போவதில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எதிர்காலத்தில் புதிய தொடரில் மீண்டும் வந்தால் இதே அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என்று நம்புகிறேன்' என பதிவிட்டுள்ளார்.