‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் தொடர் 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக கடந்துள்ளது. கோலங்கள் போல மெஹா ஹிட் தொடராக இன்னும் சில ஆண்டுகள் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது திடீரென கிளைமாக்ஸை எட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம்பிடித்த நாயகி மதுமிதா, எதிர்நீச்சல் தொடர் முடியப்போவதை குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'எல்லோருக்கும் இது இதயம் நொறுங்கும் தருணம், ஆனாலும் எது நடந்தாலும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து தான் போக வேண்டும். வித்யா, திருச்செல்வம் ஆகியோருக்கு மிக்க நன்றி. ஜனனி போன்ற முக்கியமான ரோலை என்னை நம்பி கொடுத்ததற்கு. என்னுடைய சக நடிகர்களுக்கும் குழுவினருக்கும் நன்றி' என அதில் தெரிவித்துள்ளார்.