சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
சரவணன் மீனாட்சி தொடரில் ஜோடியாக நடித்த மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா நிஜ வாழ்விலும் ஜோடியாக இணைந்தனர். இவர்களுக்கு 10 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் தேவ் என்ற மகன் பிறந்திருக்கிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் விவகாரத்து பெற இருப்பதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. அதுகுறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஸ்ரீஜா, 'உண்மையில் எங்களுக்குள் அவ்வளவு சண்டைகள் நடந்துள்ளது. பல மோசமான சண்டைகளை எதிர்கொண்டோம். இப்போதும் சண்டை போட்டு கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மகன் பிறந்திருப்பதால் சண்டைக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. சில நேரங்களில் சண்டை போடும் போது பிரிந்துவிடலாமா என்று கூட யோசித்து இருக்கிறோம். ஆனால், அதையும் மீறி அவரிடம் பேச வேண்டும் என்று எனக்கு தோன்றும். என்னை பொருத்தவரை அதை நான் ஒரு மேஜிக் என்று சொல்வேன். உங்கள் உறவில் அந்த மேஜிக் வந்துவிட்டதால் போதும் என்ன ஆனாலும் அந்த உறவு நம்மை விட்டு போகாது' என்று கூறியுள்ளார்.