'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

வானொலி நிகழ்ச்சி வர்ணனையாளாரக மக்கள் மனதில் இடம்பிடித்த மிர்ச்சி செந்தில் அதன்பின் சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகராக செந்திலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி தொடரில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஸ்ரீஜா நடிக்கவில்லை. குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். செந்தில் ஜீ தமிழில் அண்ணா தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், செந்தில் தற்போது புதிதாக கபே பிசினஸில் இறங்கியிருக்கிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், 'திருவல்லாவில் கபே ஒன்று விலைக்கு வந்தது. ஸ்ரீஜா அதை வாங்கி நடத்தலாம்னு சொன்னாங்க. நானும் ஓகே சொல்லிட்டேன். ஆனால், வேலை அதிகமாயிடுச்சு. முன்னாடி படப்பிடிப்பு முடிஞ்சதும் வீட்டுக்கு போய்டுவேன். இப்ப கேரளாவுக்கு சென்று கபே வேலைகளை பார்க்க வேண்டியிருக்கு. மற்றபடி நிர்வாகம் அனைத்தும் ஸ்ரீஜா தான் பாத்துகிறாங்க' என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.




