சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு | காதலர் பிரிவுக்கு பின் மீண்டும் சினிமாவில் முழு வேகத்தில் தமன்னா | மகன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா |
வானொலி நிகழ்ச்சி வர்ணனையாளாரக மக்கள் மனதில் இடம்பிடித்த மிர்ச்சி செந்தில் அதன்பின் சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகராக செந்திலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி தொடரில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஸ்ரீஜா நடிக்கவில்லை. குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். செந்தில் ஜீ தமிழில் அண்ணா தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், செந்தில் தற்போது புதிதாக கபே பிசினஸில் இறங்கியிருக்கிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், 'திருவல்லாவில் கபே ஒன்று விலைக்கு வந்தது. ஸ்ரீஜா அதை வாங்கி நடத்தலாம்னு சொன்னாங்க. நானும் ஓகே சொல்லிட்டேன். ஆனால், வேலை அதிகமாயிடுச்சு. முன்னாடி படப்பிடிப்பு முடிஞ்சதும் வீட்டுக்கு போய்டுவேன். இப்ப கேரளாவுக்கு சென்று கபே வேலைகளை பார்க்க வேண்டியிருக்கு. மற்றபடி நிர்வாகம் அனைத்தும் ஸ்ரீஜா தான் பாத்துகிறாங்க' என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.