நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் கவுண்டமணி லீடு ரோலில் நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந்நிலையில் சாய் பிரபா மீனா இயக்கத்தில் முரளி பிரபாகரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் செந்தில் கேங்ஸ்டராக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜை உடன் துவங்கியது. இதில் செந்தில் உடன் கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோனி, மகாநதி சங்கர், பொன்னம்பலம், கனல் கண்ணன்,சென்ராயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் சாய் பிரபா மீனா கூறுகையில், ஒரு நாற்காலி அதில் அமரப்போகும் தலைவன் யார் என்ற போட்டி 4 கேங்ஸ்டர் குழுக்களிடையே நடக்கிறது. அதில் வென்றது யார்? என்பது தான் படத்தின் கதை. முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் திருப்பங்களுடன், கமர்சியல் படமாக இதை உருவாக்க இருக்கிறோம் என்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, கோவா போன்ற இடங்களில் நடைபெறுகிறது. விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.