என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் கவுண்டமணி லீடு ரோலில் நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. இந்நிலையில் சாய் பிரபா மீனா இயக்கத்தில் முரளி பிரபாகரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் செந்தில் கேங்ஸ்டராக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜை உடன் துவங்கியது. இதில் செந்தில் உடன் கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோனி, மகாநதி சங்கர், பொன்னம்பலம், கனல் கண்ணன்,சென்ராயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் சாய் பிரபா மீனா கூறுகையில், ஒரு நாற்காலி அதில் அமரப்போகும் தலைவன் யார் என்ற போட்டி 4 கேங்ஸ்டர் குழுக்களிடையே நடக்கிறது. அதில் வென்றது யார்? என்பது தான் படத்தின் கதை. முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் திருப்பங்களுடன், கமர்சியல் படமாக இதை உருவாக்க இருக்கிறோம் என்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, கோவா போன்ற இடங்களில் நடைபெறுகிறது. விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.