டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிரபல சின்னத்திரை நடிகரான மிர்ச்சி செந்தில் மதுரை, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் நடித்து சின்னத்திரையில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் நடிகை நித்யா ராமுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஆன்லைன் மோசடி ஒன்றில் பணம் ஏமாந்துவிட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், 'எனக்கு தெரிந்த நபர் ஒருவரின் நம்பரிலிருந்து 15000 ரூபாய் பணம் கேட்டு வாட்சப் மெசேஜ் வந்தது. நான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்ததால் உடனடியாக அவர் சொல்லியிருந்த நம்பருக்கு பணம் அனுப்பிவிட்டேன். கடைசியில் பார்த்தால் அதில் வேறொருவரின் பெயர் இருந்தது. உடனடியாக அந்த நபரை போனில் அழைத்து கேட்டேன். அப்போது தான் அவர் சொன்னார். என் வாட்சப் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. காலையில் இருந்து 500 நபர்களுக்கு மேல் போன் செய்துவிட்டனர் என்று கூறினார். உடனடியாக சைபர் போலீஸில் புகார் அளித்துள்ளேன். தயவு செய்து மக்களே உஷாராக இருங்கள். யார் பணம் கேட்டாலும் ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்துவிட்டு பணம் அனுப்புங்கள்' என்று கூறியிருக்கிறார்.




