ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு |
பிரபல சின்னத்திரை நடிகரான மிர்ச்சி செந்தில் மதுரை, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் நடித்து சின்னத்திரையில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் நடிகை நித்யா ராமுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஆன்லைன் மோசடி ஒன்றில் பணம் ஏமாந்துவிட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், 'எனக்கு தெரிந்த நபர் ஒருவரின் நம்பரிலிருந்து 15000 ரூபாய் பணம் கேட்டு வாட்சப் மெசேஜ் வந்தது. நான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்ததால் உடனடியாக அவர் சொல்லியிருந்த நம்பருக்கு பணம் அனுப்பிவிட்டேன். கடைசியில் பார்த்தால் அதில் வேறொருவரின் பெயர் இருந்தது. உடனடியாக அந்த நபரை போனில் அழைத்து கேட்டேன். அப்போது தான் அவர் சொன்னார். என் வாட்சப் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. காலையில் இருந்து 500 நபர்களுக்கு மேல் போன் செய்துவிட்டனர் என்று கூறினார். உடனடியாக சைபர் போலீஸில் புகார் அளித்துள்ளேன். தயவு செய்து மக்களே உஷாராக இருங்கள். யார் பணம் கேட்டாலும் ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்துவிட்டு பணம் அனுப்புங்கள்' என்று கூறியிருக்கிறார்.