‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

மக்களின் அமோக வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடரின் சீசன் 2 மிக விரைவில் வெளியாகவுள்ளது. இதில் ஹீரோயின் உட்பட பல நடிகர்கள் மாறிவிட்டனர். ஜனனியாக நடித்து வந்த மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி, ஐஸ்வர்யாவாக நடித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு பதில் ஜானு என தாராவாக நடித்து வந்த சிறுமிவரை பல நடிகர்கள் மாற்றம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சத்யாப்ரியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் எதிர்நீச்சல் தொடரில் நடிக்கவில்லை என்றால் யாராவது வருத்தப்படுவீர்களா? யார் என்னை மிஸ் செய்ய போகிறீர்கள்' என்று கேட்டிருந்தார். இதனைதொடர்ந்து ரசிகர்கள் பலரும் சத்யப்ரியா நடிக்க வேண்டும் என்று கேட்க, அடுத்ததாக வெளியிட்டுள்ள பதிவில் நான் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியலா? என கெத்தாக கேட்டுள்ளார். இதன்மூலம் விசாலாட்சி கதாபாத்திரத்தில் சத்யப்ரியா தொடர்ந்து நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.