100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான சத்யப்ரியா மிரட்டலான பார்வை, அதட்டலான குரலால் வில்லி கதாபாத்திரத்திற்கு பெயர் போனவர். தமிழில் பல முன்னணி படங்களில் நடித்துள்ள இவர், பெரும்பாலும் நெகட்டிவ் ரோல்களில் தான் நடித்திருக்கிறார். தற்போது எதிர்நீச்சல் தொடரில் ஸ்ட்ரிக்ட்டான மாமியார் விசாலாட்சியாக தனது மருமகள்களை அடக்கி ஒடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கலாச்சாரம், பண்பாடு என மருமகள்களை மிரட்டி தனக்கு கீழே வைத்திருக்கும் சத்யப்ரியாவின் நிஜ வாழ்வே வேறு. சத்யப்ரியாவிற்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் வெளிநாட்டில் வேலைபார்த்த போது, நியூஜெர்ஸியை சேர்ந்த லாரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட சத்யப்ரியா, மகன் மற்றும் மருமகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் சத்யப்ரியா தனது மகன் மற்றும் மருமகனுடன் சேர்ந்து யூ-டியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதில் அவர் தனது மருமகளை மகளாக பாசம் காட்டுவதை பார்த்து வில்லி விசாலாட்சியா இப்படி? என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சத்யப்ரியாவின் குடும்ப புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.




