ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
நடிகை ஜீவிதா சின்னத்திரையில் பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். தவிர, கடைக்குட்டி சிங்கம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இவர் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர் குறித்து பேசியிருந்த வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. திறமையான நடிகையாக இருந்தும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யாததால் 300 பட வாய்ப்புகளை இழந்துவிட்டதாக ஜீவிதா பேட்டியில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில், 'படத்தில் எனக்கு இரண்டாவது ஹீரோயின் என்று சொன்னார்கள். கொஞ்சம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். நான் காட்சியில் தான் என்று நினைத்து உடையிலா, அல்லது நெருக்கமான காட்சியா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இயக்குநருடன் நீங்கள் அட்ஜெஸ்மெண்ட் செய்ய வேண்டும். முதலில் இயக்குநர், அடுத்தது தயாரிப்பாளர், அடுத்தது கேமரா மேன், அடுத்தது ஹீரோ என ஓவ்வொருவராக உங்கள் ரூமுக்கு வருவார்கள் என்று சொன்னார்கள். இதற்கெல்லாம் சம்மதித்தால் எதிர்பார்த்ததை விட அதிக சம்பளத்துடன் அடுத்தடுத்த பட வாய்ப்பும் கிடைக்கும் என்றார்கள். நான் முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டேன்' என்றார்.
அதுபோல மீடூ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 'நாலு சுவருக்குள் அவர்கள் சொல்வதையெல்லாம் செய்து புகழ், பணம் சம்பாதித்துவிட்டு நான்கு வருடங்கள் கழித்து அவர்களை குற்றம் சொல்வது ஞாயமில்லை. நம்மிடம் ஒருவர் தவறாக அப்ரோச் செய்தால் அதை அப்போதே மறுத்துவிட வேண்டும்' என்று கூறியுள்ளார். ஜீவிதா பல ஊடகங்களில் கொடுத்த பேட்டிகளானது துண்டு வீடியோக்களாக தொகுக்கப்பட்டு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.