'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான சத்யப்ரியா மிரட்டலான பார்வை, அதட்டலான குரலால் வில்லி கதாபாத்திரத்திற்கு பெயர் போனவர். தமிழில் பல முன்னணி படங்களில் நடித்துள்ள இவர், பெரும்பாலும் நெகட்டிவ் ரோல்களில் தான் நடித்திருக்கிறார். தற்போது எதிர்நீச்சல் தொடரில் ஸ்ட்ரிக்ட்டான மாமியார் விசாலாட்சியாக தனது மருமகள்களை அடக்கி ஒடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கலாச்சாரம், பண்பாடு என மருமகள்களை மிரட்டி தனக்கு கீழே வைத்திருக்கும் சத்யப்ரியாவின் நிஜ வாழ்வே வேறு. சத்யப்ரியாவிற்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் வெளிநாட்டில் வேலைபார்த்த போது, நியூஜெர்ஸியை சேர்ந்த லாரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட சத்யப்ரியா, மகன் மற்றும் மருமகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் சத்யப்ரியா தனது மகன் மற்றும் மருமகனுடன் சேர்ந்து யூ-டியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதில் அவர் தனது மருமகளை மகளாக பாசம் காட்டுவதை பார்த்து வில்லி விசாலாட்சியா இப்படி? என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சத்யப்ரியாவின் குடும்ப புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.