என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான சத்யப்ரியா மிரட்டலான பார்வை, அதட்டலான குரலால் வில்லி கதாபாத்திரத்திற்கு பெயர் போனவர். தமிழில் பல முன்னணி படங்களில் நடித்துள்ள இவர், பெரும்பாலும் நெகட்டிவ் ரோல்களில் தான் நடித்திருக்கிறார். தற்போது எதிர்நீச்சல் தொடரில் ஸ்ட்ரிக்ட்டான மாமியார் விசாலாட்சியாக தனது மருமகள்களை அடக்கி ஒடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கலாச்சாரம், பண்பாடு என மருமகள்களை மிரட்டி தனக்கு கீழே வைத்திருக்கும் சத்யப்ரியாவின் நிஜ வாழ்வே வேறு. சத்யப்ரியாவிற்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் வெளிநாட்டில் வேலைபார்த்த போது, நியூஜெர்ஸியை சேர்ந்த லாரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட சத்யப்ரியா, மகன் மற்றும் மருமகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் சத்யப்ரியா தனது மகன் மற்றும் மருமகனுடன் சேர்ந்து யூ-டியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதில் அவர் தனது மருமகளை மகளாக பாசம் காட்டுவதை பார்த்து வில்லி விசாலாட்சியா இப்படி? என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சத்யப்ரியாவின் குடும்ப புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.