கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
2023ம் வருடத்திற்கான கேரள அரசு திரைப்பட விருதுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. இதில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் சிறந்த சிறப்பு திரைப்படமாகவும், சிறந்த நடிகராக பிரித்விராஜ், சிறந்த இயக்குனராக பிளஸ்சி என மூன்று விருதுகளை வென்றுள்ளது.
இந்த படத்திற்காக தங்களை பல வருடங்களாக அர்ப்பணித்துக் கொண்ட இயக்குனர் பிளஸ்சி மற்றும் பிரித்விராஜ் இருவருமே இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தான் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் 2024ல் வெளியான இந்த படம் எப்படி 2023ம் வருடத்திற்கான விருது பட்டியலில் இடம் பெற்றது என தற்போது சிலர் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
சமீபத்தில் இது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் பிளஸ்சி கூறும்போது, “விவரம் தெரியாதவர்கள் தான் இதுபோன்று பேசுவார்கள். படம் இந்த வருடம் தான் வெளியானது என்றாலும் மார்ச் மாதத்திலேயே வெளியாகிவிட்டது. விருதுக்கான படங்கள் கடந்த வருடம் ஏப்ரல் முதல் இந்த வருடம் மார்ச் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். எனக்கு இந்த சர்ச்சை குறித்து கவலை இல்லை. அதேசமயம் இந்த படத்தின் உயிர்நாடியாக விளங்கிய ஏ.ஆர் ரஹ்மானின் இசை கேரள விருது குழுவினரால் எப்படி கவனிக்கப்படாமல், அங்கீகாரம் பெறாமல் போனது என்பது குறித்து தான் வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.