'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
2023ம் வருடத்திற்கான கேரள அரசு திரைப்பட விருதுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. இதில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் சிறந்த சிறப்பு திரைப்படமாகவும், சிறந்த நடிகராக பிரித்விராஜ், சிறந்த இயக்குனராக பிளஸ்சி என மூன்று விருதுகளை வென்றுள்ளது.
இந்த படத்திற்காக தங்களை பல வருடங்களாக அர்ப்பணித்துக் கொண்ட இயக்குனர் பிளஸ்சி மற்றும் பிரித்விராஜ் இருவருமே இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தான் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் 2024ல் வெளியான இந்த படம் எப்படி 2023ம் வருடத்திற்கான விருது பட்டியலில் இடம் பெற்றது என தற்போது சிலர் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
சமீபத்தில் இது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் பிளஸ்சி கூறும்போது, “விவரம் தெரியாதவர்கள் தான் இதுபோன்று பேசுவார்கள். படம் இந்த வருடம் தான் வெளியானது என்றாலும் மார்ச் மாதத்திலேயே வெளியாகிவிட்டது. விருதுக்கான படங்கள் கடந்த வருடம் ஏப்ரல் முதல் இந்த வருடம் மார்ச் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். எனக்கு இந்த சர்ச்சை குறித்து கவலை இல்லை. அதேசமயம் இந்த படத்தின் உயிர்நாடியாக விளங்கிய ஏ.ஆர் ரஹ்மானின் இசை கேரள விருது குழுவினரால் எப்படி கவனிக்கப்படாமல், அங்கீகாரம் பெறாமல் போனது என்பது குறித்து தான் வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.