நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

2023ம் வருடத்திற்கான கேரள அரசு திரைப்பட விருதுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. இதில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் சிறந்த சிறப்பு திரைப்படமாகவும், சிறந்த நடிகராக பிரித்விராஜ், சிறந்த இயக்குனராக பிளஸ்சி என மூன்று விருதுகளை வென்றுள்ளது.
இந்த படத்திற்காக தங்களை பல வருடங்களாக அர்ப்பணித்துக் கொண்ட இயக்குனர் பிளஸ்சி மற்றும் பிரித்விராஜ் இருவருமே இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தான் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் 2024ல் வெளியான இந்த படம் எப்படி 2023ம் வருடத்திற்கான விருது பட்டியலில் இடம் பெற்றது என தற்போது சிலர் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
சமீபத்தில் இது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் பிளஸ்சி கூறும்போது, “விவரம் தெரியாதவர்கள் தான் இதுபோன்று பேசுவார்கள். படம் இந்த வருடம் தான் வெளியானது என்றாலும் மார்ச் மாதத்திலேயே வெளியாகிவிட்டது. விருதுக்கான படங்கள் கடந்த வருடம் ஏப்ரல் முதல் இந்த வருடம் மார்ச் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். எனக்கு இந்த சர்ச்சை குறித்து கவலை இல்லை. அதேசமயம் இந்த படத்தின் உயிர்நாடியாக விளங்கிய ஏ.ஆர் ரஹ்மானின் இசை கேரள விருது குழுவினரால் எப்படி கவனிக்கப்படாமல், அங்கீகாரம் பெறாமல் போனது என்பது குறித்து தான் வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.




