22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
2023ம் வருடத்திற்கான கேரள அரசு திரைப்பட விருதுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. இதில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் சிறந்த சிறப்பு திரைப்படமாகவும், சிறந்த நடிகராக பிரித்விராஜ், சிறந்த இயக்குனராக பிளஸ்சி என மூன்று விருதுகளை வென்றுள்ளது.
இந்த படத்திற்காக தங்களை பல வருடங்களாக அர்ப்பணித்துக் கொண்ட இயக்குனர் பிளஸ்சி மற்றும் பிரித்விராஜ் இருவருமே இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தான் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் 2024ல் வெளியான இந்த படம் எப்படி 2023ம் வருடத்திற்கான விருது பட்டியலில் இடம் பெற்றது என தற்போது சிலர் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
சமீபத்தில் இது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் பிளஸ்சி கூறும்போது, “விவரம் தெரியாதவர்கள் தான் இதுபோன்று பேசுவார்கள். படம் இந்த வருடம் தான் வெளியானது என்றாலும் மார்ச் மாதத்திலேயே வெளியாகிவிட்டது. விருதுக்கான படங்கள் கடந்த வருடம் ஏப்ரல் முதல் இந்த வருடம் மார்ச் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். எனக்கு இந்த சர்ச்சை குறித்து கவலை இல்லை. அதேசமயம் இந்த படத்தின் உயிர்நாடியாக விளங்கிய ஏ.ஆர் ரஹ்மானின் இசை கேரள விருது குழுவினரால் எப்படி கவனிக்கப்படாமல், அங்கீகாரம் பெறாமல் போனது என்பது குறித்து தான் வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.