22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் கல்கி ஏடி 2898 என்கிற படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், சலார் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் பிரபாஸ் தற்போது புதிதாக நடித்து வரும் படங்கள் எதுவும் இந்த வருடத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில் தற்போது பழைய படங்களை ரீ ரீலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருவதால் பிரபாஸின் படங்களையும் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2010ல் பிரபாஸ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. அன்றைய தினம் அந்தப் படம் வெளியான நாளோ அல்லது பிரபாஸின் பிறந்தநாளோ எதுவும் இல்லாத நிலையிலும் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதேபோல பிரபாஸின் அறிமுக படமான ஈஸ்வர் திரைப்படமும் பிரபாஸின் 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வரும் அக்டோபர் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது.