ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் கல்கி ஏடி 2898 என்கிற படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், சலார் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் பிரபாஸ் தற்போது புதிதாக நடித்து வரும் படங்கள் எதுவும் இந்த வருடத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில் தற்போது பழைய படங்களை ரீ ரீலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருவதால் பிரபாஸின் படங்களையும் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2010ல் பிரபாஸ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. அன்றைய தினம் அந்தப் படம் வெளியான நாளோ அல்லது பிரபாஸின் பிறந்தநாளோ எதுவும் இல்லாத நிலையிலும் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதேபோல பிரபாஸின் அறிமுக படமான ஈஸ்வர் திரைப்படமும் பிரபாஸின் 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வரும் அக்டோபர் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது.